Blog Archive

Thursday, March 31, 2016

அடை மாங்காய் ஊறுகாய்



  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
 பாட்டியின் ஸ்பெஷாலிடி  இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
 அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு 
அக்கம்பக்கம்  மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
  அவரவர்  முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள்  திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.

அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.

அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.

காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.

இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள்  போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா 
என்று உறுதி  கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும்  விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள்  ஊறுகாயை ஆற வைக்கும்  பாத்திரம் தயாராகும்.
எண்ணெய்  மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
 பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள்   ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக்  கிளறப்படும்.
அப்போது  தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும்.  அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.

ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
 யாருக்கு வேணும்  அடை மாங்காய்.....






































.

Monday, March 28, 2016

கீரை வடையும் நானும். 1982

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வடைப் பிரியர்களால் நிறைந்தது இந்த உலகம்.
எலியிலிருந்து  ஏந்தி பவன் வரை
 மடைப் பள்ளியிலிருந்து  மரினா கரைவரை எங்கும் வடை மணம்.

என் மாமா எனக்கெழுதிய கடிதத்தில் மாமி செய்த கீரைவடையை வெகுவாகச் சிலாகித்து
என்னை இன்ஸ்டண்ட் கீரை வடை மோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கூடவே நீ தில்லி வந்தால் வடை கிடைக்கும் என்று சவால் வேற.

இது ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை முடிந்து ,மதுரையில்
ஃபெமினா,பொம்மை,பழைய தொடர்கதைகள், ரேடியோ சிலோன்
 என்று  நேரம் கழிந்த காலம்.

இந்தக் கீரைவடை படித்ததும்  அம்மாவிடம் சொன்னேன். மாவில் கீரையை அலசிப் போட்டு
   வறுத்தெடுத்தால் போதும்  என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அம்மாவுக்கு  என் சமையலறை  வேகம் விவேகம் இரண்டுமே தெரியும்.
  ஒரு நாள் செய்கிறேன் என்றார்.
அதற்குள்  வாழ்க்கை திருமணத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டது.
தில்லியிலிருந்து வந்திருந்த  மாமியிடம் கேட்டேன். கீரை வடை சாப்பிடலாமே போறேனுன்னு.
மாமி அழுதுவிட்டார்.
    இதை நான் எதிர்பார்க்கவில்லை. அச்சோ மன்னி அந்தவடையை நான் போகுமிடத்துகல் எப்படியாவது பழகிக் கொள்கிறேன்   என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.

          கீரைவடையை மறந்தும் போனேன்.
பிறகு  பத்துவருட தனிக்குடித்தனம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் வந்துவிட்டோம்.
கீரை வடை மட்டும் அங்கிருந்த சமையற்காரர் செய்யவில்லை.

வேறு என்னவெல்லாமோ டிபன் காஞ்சீவரம் இட்லி, அழகர் கோவில் தோசை,
சேம்பு இலை அடை  என்றெல்லாம்  வந்தாலும் எனக்கு ருசிக்கவில்லை.
கொக்குக்கு ஒண்ணே மதி..
 அப்பொழுது கிண்டி அருகே தனி  பணிமனையும், லேத் பட்டறையும்   வைத்து நடத்தி வந்தார் சிங்கம்.
மதியம் சாப்பாடு வீட்டில் தான்.
அப்போது ஒரு நாள் வாசனையாகப் பொட்டலம்  ஒன்று கொண்டுவந்தார். ஆஹா மிளகாய் பஜ்ஜி
  என்று பிரித்தேன். அங்க இருந்ததோ வண்ண மயமான  பச்சைப் பசெல் என்ற கீரைவடை.
மசாலா வடைதானேமா என்றி வரிடம் கேட்டதற்கு, கீரை சேர்த்திருக்கான் மா. அதுவும் ஸ்பினச்
என்றதும் ஆ  வென வாய் பிளந்தேன்.
கிண்டி ராஜ் பவன் அருகே ராஜ்பவன் என்றே ஹோட்டல் ஒன்று இருக்கும். அங்கு போனபோது,
குடும்பத்துக்கும் கொண்டு வந்துவிட்டது சிங்கம்.  என் வடை மோகம் பற்றி அவருக்குத் தெரியாது.ஏதோ மனல்ல அலைவரிசை இருந்ததால் அவர் வழியாக எனக்குக் கீரைவடை கிடைத்தது.
பிறகு கேட்பானேன். தினசரி வடை பஜ்ஜியோடு  சாப்பாடு.
         இதுவரை  நான் கீரைவடை செய்யவில்லை.



Saturday, March 26, 2016

இங்கு இளவேனில் ஈஸ்டர் விடுமுறை

எல்இப்போது சின்னப் பசங்க எல்லாம்
எங்க வீட்டில் வருபவர்களும் போகிறவர்களும் ஒரே மும்முரமாக இருக்கும்.
வெளியில் அழைத்துப் போவது என்பது ஆடி,அமாவாசை கணக்குத் தான்.
காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ்
இவர்கள் எல்லொரும் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தது அப்போது அந்த வருடங்களில்தான்.
எல்லொரும் காமிக்ஸ் புத்தக பாத்திரங்கள்.
ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் இவர்களும்
எங்களோடு இணைந்ததும் இந்தக் காலத்தில்.
.







அப்போ எல்லாம் மழை வரும், இது ஒரு மழைக்காலம் என்று சொன்னால் மழை பெய்யும். அநேகமாக செப்டம்பர் மாத விடுமுறைகளில் மேய்த்துக் கட்டுவது மகா சிரமம்.
எத்தனை தடவை காரம்போர்ட் விளையாடுவது, டிரேட்,சீட்டுக் கட்டு எல்லாம் அலுத்த பிறகு வானம் வெளி வாங்கும் நேரம்,
அவர்களை அழைத்துப் போக ஒரு நல்ல இடம் மௌண்ட்ரோடு எனும் அண்ணாசாலைதான்.
முதலில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.) அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின்டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெஷல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.பிறகு வீடே கலகலப்பாகி விடும்.
முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.பிறகு சின்னப் பாட்டியிடம்(ஆங்கிலம் படித்த பாட்டி) சொல்ல வேண்டும். அவர்கள்இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் ,,திருப்பிக் கொடுக்கும் நாளுக்கு முன்னால்காணாமல் போகும்.
.டியூ டேட் முடிந்து பள்ளிக்ககூடம் திறந்த பிறகு, நான்தானேஇருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!
எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நான்தான் லைபிரரி உமன்.பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,வை.மு.கோதைநாயகி அம்மாள்.
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி ,வாசந்திஇதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
விடுமுறை முடிந்து எல்லாப் புத்தகங்களையும்
திருப்பிக் கொடுக்க எடுத்தால்
இரண்டு மூணு காமிக்ஸ் காணாமல் போயிருக்கும்!
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரிசொந்தக்காரர்
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.

நான் என்ன சொல்லுவேன்?புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாகச் சின்னவனோட அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களைசும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டேன்.அதுவும் இந்த புத்தகங்கள்,
லியான் யுரிஸ், அலிஸ்டர் மாக்லீன்,

ஹாட்லி சேஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,மரியோ பூசோ,இர்விங் வாலஸ்,ஆர்தர் ஹெய்லி,இயன் ஃப்ளெமிங்,பீட்டர் பென்ஜி லி ஆகியவர்களின் பேப்பர்பாக் நாவல்கள்.


மேலும் சிலருடைய புத்தகங்களைஇடம் பற்றாக் குறையால் கிலொ கணக்கில் கொடுக்க வேண்டி வந்தது!!. அறிவு தானம் நல்லதுதானே1அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம்.
இன்னும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பழைய ஒலிநாடாக்கள்.
45 ஆர்பி எம் ஒலித்தட்டுகள்.
எல்லாமே ஒரு காலத்துக்கு மேல்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
நினைவுகளோடு சேர்ந்து விட்டன.எல் லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, March 18, 2016

vaazhka Valamudan Nalamudan.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இரண்டு மணி நேரம் இணையம் இல்லை.. .ஆஹா இந்தத் தொல்லை இங்கேயும் வந்துவிட்டதா என்றால்  ஆமாம். நடுவில்   ,மாப்பிள்ளை இந்த விஷயத்தில்  என்பதால் தற்காலிக கனெக்ஷன் கொடுத்திருக்கிறார்.
 காம்காஸ்ட் என்ற நிறுவனம் தான் தொலைபேசி, இணையம்,தொலைகாட்சி எல்லாம் கொடுக்கிறது. இருப்பதில் சிறந்ததுன்னு அதுக்குப் பேர் வேர.
கைபேசிக்கு இருப்பது இன்னொருத்தர். அவரோட இணையத்தை கணினிக்குத் திருப்பியாச்சு.
இதுக்குத் தான் இரண்டு மனம் வேண்டும்  கண்ணதாசன் அன்னிக்கு சொன்னார்.
இரண்டு கனெக்ஷன். அதாவது கணினிக்கு மட்டும்..
கிடைத்தவரை லாபம் என்று  வந்துவிட்டேன்.

-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday, March 10, 2016

தண்ணீர் ராசி!

குடங்கள். கவிழ்த்து வைக்கக் கூடாது என்று பாட்டி சொல்வார்
கோயம்பத்தூரில் இந்த மாதிரிதான்  கிணறு தோண்டுவார்கள்


இணையத்தில் கிணற்றுத் தண்ணீர் பற்றிப் பேச்சு வந்தது. சென்னைக்கு வந்த  புதிதில்  பாட்டி வீட்டுக் குழாயை அதிசயமாகப் பார்த்துச்  சந்தோஷப்படுவேன்.  குடத்தைத் தூக்கிக் கொண்டு  கிணற்றுக்குப் போக வேண்டாம். அதுதான்  முதல் காரணம்.
நாங்கள் தெற்குச் சீமைகளில் இருந்த இடத்திலெல்லாம் அப்போது குழாய் வசதி கிடையாது. அப்பாவுக்கு மாற்றலாகும் இடங்களில் கிடைக்கும் வீட்டில் முதலில் நாங்கள் பார்க்க ஓடுவது
கிணற்றைத்தான்.

அதில் எட்டிப் பார்த்துத் தண்ணீர் அருகில் இருந்தால் ஒரே சந்தோஷம்.
திருமங்கலம் வீட்டில் கிணற்றில் தடுப்பு போட்டிருக்கும்.
ஒரு பக்கம் சமையலறைக்கும்
மறுபுறம்    குளிக்க,துவைக்க, பாத்திரம் தேய்க்க  என்று தனியாக வேறு கயிறும் வாளியும் இருக்கும்.
சமையலறைப் பக்கம் அன்னன்னிக்குத் தேய்த்து வைக்க ஒரு குடம்.

அதன் பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி.அதற்கு ஒரு மூடி..
அதிலிருந்து  சமையலுக்கு உள்ளே கொண்டு நிரப்ப ஒரு அண்டா..
அப்பா சாமீன்னு ஆகிவிடும்.
அம்மாவுக்கு   அல்சர் வந்து குணமாகி வந்த நேரம்.
அதனால் நான்  உதவி செய்வது வழக்கம்.  கைசிவந்து போய்விடும். புதுக்கயிறு அப்படித்தான் இருக்கும் என்று அப்பா கைக்கு தேங்காயெண்ணெய் தடவி விடுவார்.

திண்டுக்கல்லுக்கு மாற்றலாகியது. அங்கு செயிண்ட் ஜோசஃப் பள்ளியில்
அப்பா சேர்த்துவிட்டார்.
இங்கயும் கிணறு தானாப்பா    என்பதுதான் என் முதல் கேள்வி. ஆமாம்ம்மா ஆனால் நல்ல தண்ணீர்க் கிணறு என்று   ஒன்று இருக்கு. அங்கதான்   போய் எடுத்துக் கொண்டு வரணும் என்றார்.
முதல்நாள் அலுவலகத்திலிருந்த வந்த  பியூன்  கொண்டு போய்க் காட்டினார். நான் பெரிய குடம்.தம்பி சின்னக் குடம். தண்ணீர்  இல்லாத  கல் பூமி.காற்று என்னவோ பிரமாதமாக அடிக்கும்.காய்கறி எல்லாம் கொடைக்கானலில் இருந்து வரும். பள்ளிக்குப் பக்கத்தில்
இருக்கும் மேட்டுப்பட்டி என்ற  இடம். பள்ளியில் மணி அடித்தால் இங்கே கேட்கும்.

அவசரத்துக்கு அங்கே  போனோம். தாத்தா பாட்டி வந்த போது அவர்களுக்கு அங்கெ
பிடிக்கவில்லை.
நாராயணா   கிணத்துதண்ணிக்குக் குழந்தையை அனுப்பாம இருக்கிற வீடா பாரு. 12 வயசில
ஒரு பர்லாங் நடந்து தூக்கிக் கொண்டு வரதே. வேற வீடு பாருன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

பிறகு கிடைத்த வீடுதான் கிருஷ்ணாராவ்  ஸ்ட்ரீட் என்னும் தெருவில் ஒன்று போல் அமைந்த பத்துவீடுகள் கொண்ட      காலனி வீடு.. அழிக்கதவு போட்ட வராந்தா,ஒரு நடை ஒரு ஹால் ஒரு குட்டி  பெட்ரூம் நல்ல சமையலறை புகைபோக்கி என்று(விறகடுப்ப்தான் அப்ப எல்லாம். ஒருஸ்டவ் உண்டு. கரியடுப்பும் உண்டு.) எங்கள் மூவருக்கும் பிடித்துவிட்டது.
சின்னத்தம்பிக்கும் எனக்கும் ஏகப்பட்ட தோழர்கள் தோழிகள் கிடைத்தார்கள்.
தூரத்தில் சௌந்தரராஜா மில் தெரியும். அந்த நாளிலேயே  சொந்த விமானம் வைத்திருந்தார் என்று கேள்வி..
ஒரே  ஒரு குறை இங்கயும் கிணற்றுக்கு மூன்று வீடு தாண்டி போக வேண்டும்.
பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கிணறு. நாலைந்து ராட்டினம்.
நம் ராட்டினத்தையும் கயிற்றையும்   நாம்   தான் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.


அப்பா அம்மாவைத் தண்ணீர்  இறைக்க விடமாட்டார். அலுவலகம் கிளம்பும் வரை
முடிந்த பாத்திரம் பண்டங்களில்    எல்லாம் தண்ணீர் நிரப்பிவிட்டுத் தான் போவார்
தம்பிகளுக்கு பத்தும் எட்டும்   வயது
நான் தான் பெரிய மனுஷி.
எனக்கு  ஸ்ட்ரிக்ட் ஆர்டர்ஸ்   போட்டுவிட்டு அப்பா கிளம்புவார்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 05, 2016

ஒரு சிறு குறிப்பு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிலர் பிறப்பார்கள் வாழ்வார்கள் மரிப்பார்கள்.
சிலருக்கே வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக அமையும்
எதையாவது சாதிக்கவேண்டும் என்கின்ற
 ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
நானே ஒரு உதாரணம்.
 திருமணமான புதிதில் வேலை நேரம் போக
உலாவச் செல்வது உண்டு.
இரவு  ,நடு இரவு வரை பெரிய  ட்ராஃப்ட்ஸ்மன்  பலகையில் வெள்ளைத்தாளில் பின்ஸ் குத்தப்பட்டு வரைந்து கொண்டிருப்பார்.
நானும் கூட உட்கார்ந்திருப்பேன்.
வெறும் தண்ணீர்+காற்றில்  ஓடும் வண்டியை  அமைப்பதில்
ஈடுபட்டிருந்தார்.
யாரிடமும் இருந்தும் உற்சாகம் கிடைக்காவிட்டாலும்
கேலிகள் கிடைத்தன.
 அதே போல் ஒரு சின்ன மோட்டாரை வாங்கி அதை இயக்கவும் செய்தார்.
மேலே பணம் போட வசதி இல்லை.

வேலை செய்த தொழிற்சாலையில்  உழைப்பு அதிகம்.
ஒவ்வொரு சக ஊழியரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார்.

டிசம்பர் வந்தால்,எல்லா ஊழியர்களின் ஜாப் கார்ட்  என்பதில் அவரை
அவர் நடவடிக்கைகளைப் பார்த்து மதிப்பீடு கொடுத்தால் தான் அவர்களுக்கு மேற்கொண்டு
சம்பளம் உயரும்.
வேலையில்  சலிப்புக் காண்பிப்பவர்களை நல்ல வார்த்தை சொல்லி
 வேலை செய்ய வைத்து அவர்களுக்கு நல்ல
சம்பள உயர்வையும் சிபாரிசு செய்து விடுவார்.
   அத்தனை உள்ளங்களின் வாழ்த்துகள் தான் எங்களை இன்னும் நல்லபடியாக
வைத்திருக்கின்றன..  நன்றியுடன்  மிஸஸ்.சிம்மு.

Singam 76....March

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக எண்ணவில்லை.
எனக்கும் வயதாகி வருகிறது . இன்னும் கொஞ்ச நாட்கள்
சென்றால் நானும் வந்துவிடுவேன் .
 அதுவரை எவருக்கும் தொந்தரவு இல்லாமல் எல்லாக்குழந்தைகளும்
பேரன் பேத்திகளும் உற்றார் சுற்றம் நட்புகள் எல்லோரும் நலமாக இருக்க ப பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Friday, March 04, 2016

எண்ணங்கள் இணைந்தால் இருத்தல் சுகம்.

எண்ணங்கள்  இணைந்தால் 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 APRIL  1972 மலம்புழா வாஆஆ. குழந்தைகளுக்கு  ஹோம்வொர்க் இருக்கு என்று ஆரம்பித்தாள். நான் அவள் கைகளைப் பிடித்து இன்னிக்கு ஒரு நாள் அந்தக் கவலையவிட்டு விட்டு சுந்தரத்தைக் கவனி.
கல்யாணமாகிப் பதினைந்து வருஷத்துக்குள் இதென்ன பெரிய  மாற்றம்.
அவர் மனம் மாறாமல் நீ நிதானமாக இரு என்றேன்.
சரிஎன்றதும் ஏற்பாடுகள் விரைந்து நடந்தன.
சிங்கம் தன் நண்பரிடமிருந்து   ஷெவி  இம்பாலா ஒன்றை எடுத்துவந்தார். கப்பல் போல அந்த வண்டியைப் பார்த்ததும் குழந்தைகள்  சந்தோஷக் கூச்சலிட்டன.

சந்திரன் ,ராஜி,குப்புசாமி அனைவரும் தாங்கள் பின்னால் வருவதாகச் சொல்ல எங்கள் ஒன்பது பேரை ஏற்றிக்கொண்டு படு ஜோராய் ,பாட்டுகள் ஒலிக்க வண்டி கிளம்பியது. கொஞ்ச தூரம் போனதும்   ஏம்பா சிம்மு, நாம் ஒரு க்ரேட் CRATE  பியர் வாங்கிக் கொண்டு போலாமே. இட் ஷுட் பி நைஸ் என்றார் சுந்தரம்.


நம்ம வீட்டு ராக்கம்மா வண்டியை விட்டு இறங்கிடுவாங்கப்பா,அதெல்லாம் நாம் தனியா வச்சுக்கலாம் என்றதும் உமா முகம் தெளிந்தது.
முன்சீட்டில் நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டோம்.
அப்போது பிரபலமாக இருந்த  என்னடி ராக்கம்மா,மற்றும்குழந்தைகளுக்குப் பிடித்த பாடல்களை
 வண்டியில் இருந்த ரெகார்டரில் போட  கைகளைக் கொட்டிப் பாடியபடி பயணம் தொடர்ந்தது,
  உமா,சுந்தரத்துடன் ஏதோ பாடியபடி  வந்தாள்.
ஹேனா போலோ போலோ பாடல் வந்ததும் ஒரே கூச்சல்.சுந்தரமும் சிரிப்பார் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஏதோ  பாரம் இறங்கியது போல இருந்தது.
   பின்னால் அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தபோது அந்த நீல வண்டியைக் காணோம்.
              சிறிது நேரத்தில் மலம்புழா அணைக்கட்டும் வந்தது. உடனே இறங்கிய
குழந்தைகள்  அங்கே தோட்டத்தில்  விளையாட ஆரம்பித்தார்கள்.
 நாங்கள் நால்வரும் சந்திரன் குடும்பத்தை  எதிர்பார்த்து வண்டியிலியே இருந்தோம்.
அவர்கள் வந்ததும் அவர்ஜகள் தாமததுக்கான காரணம் தெரிந்தது.
சந்திரனும் குப்புசாமியும் ஆளுக்கொரு  க்ரேட் பியர் பாட்டிகளுடன்  இறங்கினார்கள்.
ஒபவ்வொன்றிலும் ஆறு பாட்டில்கள்  இருந்தன. இதுவரை  சந்தோஷமாக இருந்த உமாவின் முகம் கறுத்தது.
ராஜியும் சந்திரனும் தரை விரிப்புகளை விரித்து ,நொறுக்குத் தீனிகளையும்,மற்ற மதுவகைகளையும் வைத்து இவரையும் சுந்தரத்தையும் அழைக்க., டேய் நீ நாளைக்கு  தலைச்சேரி போகணும்னு சொன்னயே.  டிலே இல்லாமல் நாம் திரும்ப வேண்டும் என்று அவனைத்  தடுத்தார் சிங்கம்.
கம் ஆன். திஸ் வோண்ட் டு எனி ஹார்ம்.மிஸஸ் சுந்தரம்  நீங்கள் யெஸ் சொல்லுங்கள் என்றார் சந்திரன்,
ராஜியும் சேர்ந்து கொண்டாள். பம்பாயில் வார இறுதி மிக சந்தோஷமாகக் கழிவது இந்த  ட்ரிங்க்ஸ் மூலமாகத்தான் என்றாள்.
  யூ பீப்பிள் காரி ஆன் ,நாங்கள் குழந்தைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நடையைக் கட்டினார் இவர். நானும் ராஜியும் தொடர்ந்தோம்.
நாளைக்கு மேனேஜிங்க் டிரக்டர் வருகிறார்ப்பா.
  இந்த வாய்வாசனையோடு அவர் அருகே போக முடியாது  என்று இவரும்
விளக்கினார்.
            பேசியபடியே படகுத்துறைக்கு வந்துவிட்டோம். வரிசையில் நின்று
படகில் ஏறியதும்  கும்மாளம் அதிகரைக்க ரோ ரோ ரோ  அ போட்,மற்றும் பல பாடல்கள் குழந்தைகள் ரசித்துப் பாட நாங்களும் சேர்ந்து கொண்டோம். இப்ப மட்டும் நிலா இருந்தால் ஆஹா இன்ப நிலாவினிலே   பாடலாம் என்ற  உமாவைப் பார்த்து சுந்தரம் சிரித்தார், வளர்ந்துட்டியே தவிர ,குழந்தைதான் நீ என்று அவர் சொல்ல சிணுங்கிக் கொண்டாள்.
 ஒரு பெரிய ரவுண்ட் முடிந்து கரையை நெருங்கிய போது இருள் கவியத்தொடங்கியது.
    மற்றவர்கள் இருந்த இடத்தை  நெருங்கிய போது அவர்களின் சத்தமான சிரிப்புச் சத்தம் கேட்டது.  என்னப்பா ,  எல்லாம் ஓவரா என்றபடி  இவரும் சுந்தரமும் அவர்களை நெருங்க. வி கான் கோ ஒன் மோர் ரவுண்ட். ராஜி ,அந்த பெரிசை எடுத்துக் கொண்டுவா என்றதும் அவளும் விரைந்தாள்,
சுந்தரம் முகம் அருவருப்பில்  சுருங்குவதை நான் பார்த்தேன்.
இப்பவே மணி ஏழுப்பா. போய்ச்  சேர்ந்து பசங்களுக்குச் சாப்பாடு வேற கொடுக்கணும் . நாம் போகலாம் என்றார்.
சந்திரன், கடிந்து கொள்ளாத குறையாக,இங்க இருக்கிற கோயம்பத்தூருக்குக் கவலைப் படுகிறாயே.
   நான் ரொம்ப ஸ்டெடியா ஓட்டுவேன். என்றார்.
எங்கள் பக்கத்தில் வந்த ராஜி ,என்னைப் பார்த்து ஒரு கொண்டை போட்டு
 சுந்தரத்தை உமா பக்கம் இழுத்துவிட்டாயே என்று சிரித்தாள்.
எனக்குப் பிடிக்கவில்லை. அவள் ஏற்கனவே  அழகிதானே. இது வேறும் மேல் அலங்காரம். மனசு சரியாக இருந்தால் தம்பதிகளுக்குள்,சலிப்பு வரக் காரணமே இல்லையே என்றேன்.
     மெட்ராஸ்  வாசிகளின் மனப்போக்கே வினோதம் என்று அந்த இடத்தைவிட்டுக் கணவனை நோக்கி   நகர்ந்தாள்.
சுந்தரமும் இவரும்   கிளம்பினார்கள்,.
  சட்டென்று எதோ தோன்ற  ஹேய் சந்திரா இந்த நிலமையில் வண்டி ஓட்டவேண்டாம். நான் உன் வேனை எடுக்கிறேன் வா,. சுந்தரம் இம்பாலாவைக் கொண்டுவரட்டும் என்று கேட்டார்.  நைட் இஸ் ஸ்டில் யங்க் ,ஐ டோண்ட் நோ ஒய்  யு ஆர் மேகிங்க் சச் ஃபஸ் என்றவன் தள்ளாடியபடியே எழுந்தான். இப்பொழுது ராஜியும் குழந்தைகளும் பயப்படுவது கண்கூடாகத் தெரிந்தது.
   ராஜி ஒரு பக்கம் சந்திரனைப் பிடிக்க,சுந்தரம் குப்புசாமியைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வண்டியில் ஏற உதவினார்கள்.
உமா ,கோமதிக்கு எழுதௌகிறேன் பாருங்கள் குப்புசாமி. இதுதான் நீங்கள் வேலைபார்க்கும் அழகா. பாவம் எங்க ஊர்ப் பெண்கள் ஒண்ணும் தெரியாதவர்கள் என்று நினைக்காதீர்கள்.
    பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் நாங்களும் என்று கொட்டித் தீர்த்தாள்.
கோமதி,குப்புசாமியின் மனைவி. இவளுக்கு அவளைத் தெரியும் என்பதே அதிசயம்.
சைடில் சுந்தரத்துக்கும் வார்னிங்க் கொடுக்கிறாளோ  என்ற சந்தேகத்தில் அவள் முகத்தைப் பார்த்தேன்.  சின்னச் சிரிப்போடு குழந்தைகளை அழைத்தாள்.
 எல்லோரும் கிளம்பிக் கோவை வந்து சேர்ந்தோம்.
சிங்கம்  ராஜி சந்திரன் குப்புசாமியை அவரவர் இடத்தில் இறக்கிவிட்டு வந்து சேரும் வரை எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
  நான் தான் ஓட்டுகிறேன் என்ற தைரியத்தில் அவன் மிச்சமிருந்ததையும் குடித்துவிட்டான்மா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உமா வரும் சப்தம் கேட்டரது.
கையில் ஒரு பெரிய தட்டில் பத்து பதினைந்து தோசைகள் வார்த்து எடுத்து வந்திருந்தாள்.
        இந்த ஞாயிறு  இப்படியாச்சு. அடுத்த வாரம் எப்படியோ என்றாள் என்னைப் பார்த்து.

இல்லை  மிஸஸ் சுந்தரம். அவனைப் பற்றிக் கவலை வேண்டாம்.
அந்தப் புடவை கூட அவனக வாங்கவில்லை.
சந்திரன் தான் தன் மனைவிக்காக  ஒரு புடவையை எடுத்துகொண்டிருக்கிறான். பில் இவன் தலயில்.
இனி  மனம் விட்டுப் பேசுங்கள். அவன் மேலிருக்கும் நம்பிக்கையை விடவேண்டாம்.
  அதற்குப் பின் எல்லாம் சுமுகமானது. இரண்டு விஷயங்கள் காரணம்.
ஒன்று சந்திரன் குடும்பம் மீண்டும் பம்பாய் போனது.
இரண்டு  சுந்தரத்துக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்தது.
   பிறகென்ன ராம் நகர் ஆஞ்சனேயர் வடை மாலைகள் சூட்டிக் கொண்டார்.
சுபம்,.


Wednesday, March 02, 2016

Independance

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்




ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.

மற்றவர்கள் பாதுகாப்பு என்ற  அன்பின்
வட்டத்தில்   என்னை வைத்துவிட்டார்கள்.

நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.

அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.

இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .

ஒரு நன்றி இல்லாத   அம்மாவின் புலம்பல்.

Tuesday, March 01, 2016

தலை தப்பியது....3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும்  எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்

அடக்கி   வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை  இனிமையா வச்சுக்கோ.
 ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32  வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க்  மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர்  வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும்   கௌரிஷங்கர்   ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள்   பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
      சிங்கம் முதலில் போய்  14  நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..

 சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த  ஹேர்டூ  செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
 எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
 போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
   சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
 வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில்  வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக  இருப்பதாக  நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய  நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள்  தானே  சப்போர்ட் என்றேன்.
    சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை  சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
 எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர  மற்ற எல்லோரும் வெளியே  வருவதைப் பார்த்தோம்.
  உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ்  நாம் எல்லோரும்  மலம்புழா போய் வரலாமா
என்று  கேட்டபடி  வந்தார்.
Add caption